Kathir News
Begin typing your search above and press return to search.

தருமபுரியில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்!

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு இண்டூரில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர்.

தருமபுரியில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்!

ThangaveluBy : Thangavelu

  |  12 Dec 2021 8:26 AM GMT

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு இண்டூரில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர்.

தருமபுரி மாவட்டம், இண்டூரில் இன்று மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் வருவதை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை இண்டூரில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சமூக ஆர்வலர் ஆதிமூலம் ஏற்பாடு செய்தார் என்பது குறப்பிடத்தக்கது. அதன்படி சேவாபாரதி தமிழ்நாடு மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, அக்னி சிறகுகள் அறக்கட்டளை, உதவும் உள்ளங்கள் சிகரம் அனைத்து வாகன ஓட்டுநர் நலச்சங்கம், தருமபுரி உதவு உன்னால் முடியும் அறக்கட்டளை, விஜய் மக்கள் இயக்கம் நல்லம்பள்ளி, இண்டூர் இணைந்த கரங்கள், தருமம் அறக்கட்டளை தருமபுரி, சேலம் சிவராம்ஜி இரத்த வங்கி இணைந்து இந்த முகாமை நடத்தினர்.


விவேகானந்தன், சரவணன், முருகன், சின்னமுத்து, தேவா, காந்தி, சசி, சிலம்பரசன், ராமன், திருப்பதி, சூரியமூர்த்தி, ஆகியோர் உள்ளிட்டோர் முகாம் பொறுப்பாளர் ஆவார். மேலும், இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்றத் தலைவர் சிலம்பரசன் மற்றும் சின்னசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த முகாம் இன்று (டிசம்பர் 12) காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Kathirnews

Next Story
கதிர் தொகுப்பு
Trending News