Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை அதிரும் வகையில் பா.ஜ.கவினர் கோஷமிட்டு மகிழ்ச்சி!

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தி.மு.கவினர் மற்றும் பா.ஜ.கவினர் போட்டி கோஷத்தில் ஈடுபட்டார்கள்.

சென்னை அதிரும் வகையில் பா.ஜ.கவினர் கோஷமிட்டு மகிழ்ச்சி!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 May 2022 12:15 PM GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று மாலை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தற்போது வருகை புரிந்து இருக்கிறார். இதனை முன்னிட்டு பா.ஜ.கவின் சார்பில் போட்டிபோட்டுக்கொண்டு கோஷங்கள் எழுப்பப்படுகிறது. ஏற்கனவே பா.ஜ.க கட்சியை சேர்ந்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் பிரதமர் மோடி வருகைக்காக எதிர்பார்த்து செய்தித்தாள்களில் விளம்பரம் படுத்துவது முதல் அவருடைய வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்கள். காத்திருப்புக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது.


மேலும் முதல் முறையாக தற்போது முக ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விழாவாக இது அமைந்திருக்கிறது. இதன் காரணமாக பிரதமர் மோடி அவர்களுக்காக பா.ஜ.க அமைப்பினர் மகிழ்ச்சியுடன் பிரதமர் நரேந்திர மோடி வாழ்க! பிரதமர் வாழ்க! என்று கோஷங்களை எழுப்பி உள்ளார்கள். இதனை கேட்டு தி.மு.கவினரும் கருணாநிதி வாழ்க! ஸ்டாலின் வாழ்க! தளபதி வாழ்க! என்று கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள். இதன் காரணமாக தற்போது சென்னை அதிரும் வகையில் களைகட்டியுள்ளது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News