Begin typing your search above and press return to search.
பெரியாரியவாதிகளை கோவிலுக்குள் நுழைப்பதே தி.மு.க'வின் திட்டம் - போட்டு உடைக்கும் ஹெச்.ராஜா
Breaking News.

By :
"பெரியாரியவாதிகளை கோவிலுக்குள் நுழைப்பதே தி.மு.க'வின் திட்டம்" என ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "பதவியேற்ற 3 மாதங்களில் திமுக அரசு வாங்கிய கடன் 40,000 கோடி ரூபாய். இன்னும் 92,000 கோடி ரூபாய் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த பட்ஜெட்டை பார்த்தால் பொருளாதாரம் தெரிந்தவர்கள் போட்ட பட்ஜெட்டாக எனக்கு தெரியவில்லை" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மூலம், பெரியாரியவாதிகளை கோவிலுக்குள் நுழைப்பதே தி.மு.க'வின் திட்டம். மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த சட்டம் ஐந்து நிமிடத்தில் நீதிமன்றத்தில் அடிபட்டு போகும்" என்றார்.
https://twitter.com/AsianetNewsTM/status/1428715962505699335?s=09
Next Story