Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை !

Weather Predictions.

அடுத்த 3 நாட்களுக்கு  கனமழை எச்சரிக்கை !

G PradeepBy : G Pradeep

  |  2 Sep 2021 10:12 AM GMT

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும் பெய்யும்.

நாளை (3-ந்தேதி) நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், 4-ந் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி 13 செ.மீ., கலசப்பாக்கம் 12, புதுக்கோட்டை, அதிராமப்பட்டினம் தலா 8, செய்யார் 7, வட்டணம், தாமரைப்பாக்கம் தலா 6, செங்கம் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Image : The Weather Channel

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News