Kathir News
Begin typing your search above and press return to search.

பரபரப்பு: கோவை விமான நிலையத்தில் 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்.!

இந்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் பீளமேடு காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். சசிக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முறையான அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

பரபரப்பு: கோவை விமான நிலையத்தில் 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்.!

ThangaveluBy : Thangavelu

  |  29 July 2021 7:35 AM GMT

திருப்பூரை சேர்ந்தவர் சசிக்குமார். இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தொழில் ரீதியாக சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் சென்றார். அப்போது அவரது உடமைகள் வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது உடமைகளை ஸ்கேன் செய்தபோது, அவர் பையில் 92 துப்பாக்கி குண்டுகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உடனடியாக குண்டுகளை பறிமுதல் செய்ததோடு, இது பற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் பீளமேடு காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். சசிக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முறையான அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இருந்தபோதிலும் ஒரே நேரத்தில் 92 துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News