Kathir News
Begin typing your search above and press return to search.

அவனியாபுரத்தில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.!

அவனியாபுரத்தில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.!

அவனியாபுரத்தில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jan 2021 9:14 AM GMT

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இன்று மதுரை அவனியாபுரத்தில் காலை 8 மணியளவில் தொடங்கியது. தமிழர்களின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம்தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதே போன்று இந்த வருடத்திற்கான போட்டி இன்று தொடங்கியது. இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக மிகவும் கட்டுப்பாட்டுடன் போட்டி நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி இன்று அவனியாபுரத்தில் காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. சீறி வரும் காளைகளை அடக்குவதில் மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் போட்டி தொடங்கியது. இதில், 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர், 830 காளைகள் களத்தில் உள்ளது.

எந்த மாதிரியான காளைகள் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி திமில் உள்ள நாட்டின காளைகளாக இருக்க வேண்டும். காளைகளுக்கு வெளிக் காயங்கள் எதுவும் இருக்க கூடாது. காளைகளுக்கு முழு கண்பார்வை திறன் இருக்க வேண்டும். ரத்த சோகை பாதிப்பு, சோர்வுள்ள காளைகளாக இருக்க கூடாது முதலான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

மேலும் காளைகளுக்கு போதை வஸ்து கொடுக்கப்பட்டுள்ளதா என சோதிக்கப்படும். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் ஆகும்.
இதனை பார்ப்பதற்காக பார்வையாளர்கள் காலை முதலே குவியத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News