Kathir News
Begin typing your search above and press return to search.

பேருந்து விபத்து.. நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

பேருந்து விபத்து.. நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

பேருந்து விபத்து.. நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jan 2021 4:16 PM GMT

தஞ்சாவூர் அருகே தனியார் பேருந்தில் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (12ம் தேதி) திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற கணநாதன் என்ற பேருந்து வரகூர் அருகே எதிரே வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக ஒதுங்கியபோது, சாலையோரம் தாழ்வாகச் சென்ற மின்கம்பி உரசி பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர், அவர்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதே போன்று பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயையும் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News