Begin typing your search above and press return to search.
வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை.. தேர்தல் ஆணையம்.!
வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னரே முகவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

By : Thangavelu
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது வேட்பாளர்களின் முகவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: வாக்கு எண்ணிக்கைக்கு வருகின்ற வேட்பாளர்களின் முகவர்கக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதுவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னரே முகவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், முககவசம் அணிந்திருக்கு வேண்டும். அலுவலர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
