Kathir News
Begin typing your search above and press return to search.

கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கு - தி.மு.க. அரசுக்கு நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு!

கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கு - தி.மு.க. அரசுக்கு நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு!

ThangaveluBy : Thangavelu

  |  19 May 2022 7:28 AM GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தராய சாமி கோயில் மற்றும் நாமக்கல் அங்காளம்மன் கோயில் சொத்துக்களை பாதுகாக்கக் கோரிய வழக்கில் உடனடியாக தி.மு.க. அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பெத்தராய சாமி கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலுக்கு சொந்தமான 70 ஏக்கர் நிலம் மற்றும் தங்கம் வெள்ளி நகைகளை பத்திரமாக பாதுகாக்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும், நாமக்கல் மாவட்டம் சர்க்கார் பாளையத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் சேமடைந்திருப்பதால் அதனையும் பாதுகாக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், தி.மு.க. அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Source: Dinamalar

Image Courtesy:Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News