Kathir News
Begin typing your search above and press return to search.

சாதி வாரியான புள்ளி விவரங்கள்.. புதிய உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர்.!

சாதி வாரியான புள்ளி விவரங்கள்.. புதிய உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர்.!

சாதி வாரியான புள்ளி விவரங்கள்.. புதிய உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Dec 2020 6:36 PM GMT

தமிழகத்தில் சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிக்க பிரத்தியேக ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பான முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றது.


எனவே தமிழகம் முழுவதும் சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரித்தால் மட்டுமே முழு தகவல்கள் கிடைக்கப் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை எதிர்கொள்ள இந்த புள்ளி விவரம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இன்று பாமகவினர் 20 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News