Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசால் 23.32 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயன் - மத்திய இணை அமைச்சர் தகவல்!

கடந்த ஏழு ஆண்டுகளில் 12,712 முகாம்கள் நடத்தி மாற்றுதிறனாளிகள் பயனுடையதாக மத்திய இணை அமைச்சர் அ. நாராயண சுவாமி தகவல்.

கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசால் 23.32 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயன் - மத்திய இணை அமைச்சர் தகவல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Jun 2022 12:00 AM GMT

நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்ட 12,712 முகாம்களின் மூலம் ரூ.13.85 கோடி மதிப்பீட்டில் 23.32 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து உள்ளதாகவும், தமிழகத்தில் ரூபாய் 47.92 கோடி மதிப்பீட்டில் 490 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது என்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் அ. நாராயணசுவாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் மத்திய அரசின் ALIMCO நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் இவ்வாறு பேசினார். இந்த முகாமில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் அ. நாராயணசுவாமி கலந்துகொண்டு 2052 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 7 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


அப்போது பேசிய அவர், பாரத பிரதமர் அவர்கள் மாற்றுத்திறனாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உபகரணங்களை வழங்கி வருவதாகக் கூறினார். மேலும், மாற்றுத் திறனாளிகளால் எதுவும் சாதிக்க முடியாது என்ற கருத்து சமூகத்தில் நிலவுவதாகவும், ஆனால் மற்றவர்களை போல் சாதிக்க முடியும் என்பதற்காக மத்திய அரசு அவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் செவித்திறன் கருவி, 219 மருத்துவ மனைகள் நிறுவப்பட்டு 4170 செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என கூறினார். வேலைவாய்ப்பு 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு 5 சதவீதமாக உள்ளது என்று கூறினார்.


நாடு முழுவதும் ரூ.533.59 கோடி மதிப்பீட்டில் 1314 கட்டடங்களில் சாய்தள வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், தமிழ் நாட்டில் 30 அரசு அலுவலகங்களில் ரூ.46.9 கோடி செலவில் சாய்தள வசதிகள் ஏற்படுத்தப்படுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Input & Image courtesy:PIB chennai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News