Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.!

தஞ்சை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.!

தஞ்சை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Dec 2020 7:43 AM GMT

பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த மாதம் 24ம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர் புயலும், அதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் அடுத்து உருவான புரெவி புயல் காரணமாகவும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஒரு சில மாவட்டங்களில் அதிதீ கனமழையும் கொட்டி தீர்த்தது.



அதன்பின், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் வறண்ட வானிலையே பெரும்பாலான இடங்களில் நிலவி வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும், நாளையும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் என்.புவியரசன் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால் விவசாயிகள் மீண்டும் கவலையடைந்துள்ளனர். ஏற்கெனவே புயல் காரணமாக கனமழை கொட்டியது தற்போது மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News