Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Dec 2020 3:37 PM GMT

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது பற்றி வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. பிற மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரையிலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் இரவு நேரங்களில் பனி கொட்டித்தீர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News