Kathir News
Begin typing your search above and press return to search.

கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம்.!

கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம்.!

கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Dec 2020 6:54 AM GMT

‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. புயலுக்கு பின்னர் சில நாட்களில் மட்டும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வந்தது.

சென்னையை பொறுத்தமட்டில் பகல் நேரங்களில் வெயில், மாலை நேரங்களில் பனிப்பொழிவு என வித்தியாசமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இந்நிலையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15-ம் தேதி (இன்று) தமிழகம் கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News