Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
By : Kathir Webdesk
தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்லுக்கு பின்னர் மழை பெய்யவில்லை, மாற்றாக கடந்த 10 நாட்களாக பனிப்பொழிவு அதிகமாகவே காணப்படுகிறது. காலை 10 மணிவரை வாகனங்கள் முகப்பு விளக்குகளை போட்டு செல்வதை காண முடிகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளையும் காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story