Kathir News
Begin typing your search above and press return to search.

டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு - செங்கல்பட்டு ஆட்சியரிடம் சிறுவர்கள் மன்றாடல்

டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு - செங்கல்பட்டு ஆட்சியரிடம் சிறுவர்கள் மன்றாடல்

ThangaveluBy : Thangavelu

  |  30 April 2022 12:59 PM GMT

ஊரப்பாக்கத்தில் புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அருகே காரணை புதுச்சேரி, அருங்கால், கீரப்பாக்கம், காட்டூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் சுமார் 3000க்கும் அதிகமான வீடுகள் உள்ளது. அங்கு கோயில்கள், பூங்காக்கள், மருத்துவமனை மற்றும் தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ளது.

இந்நிலையில், ஊரப்பாக்கம் அடுத்த காரணை புதுச்சேரி சாலையில் அமைந்திருக்கும் சிவன் அவென்யூ 205/49,50 அடங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளில் புதிதாக மதுபானக்கடை துவங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இப்பகுதியில் புதிதாக மதுக்கடை திறந்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக அமையும் என்றனர். இதனால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் சிறுவர்கள், மற்றும் பெரியவர்கள் மனு அளித்தனர். கடை திறப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவும் அளித்தனர்.

Source, Image Courtesy: News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News