செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 பேர் உயிரிழப்பு.!
ஆக்சிஜன் இல்லாமல்தான் மூச்சுத்திணறி இறந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
By : Thangavelu
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தினமும் 500க்கும் மேற்பட்டோர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையில் ஏராளமானோர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு 10 மணி முதல் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலருக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் அவதியுற்று வந்த நிலையில், 11 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்சிஜன் இல்லாமல்தான் மூச்சுத்திணறி இறந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, போதுமான அளவிற்கு ஆக்சிஜன் உள்ளது. இருந்தபோதிலும் எப்படி நோயாளிகள் இறந்தனர் என்பது விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.