Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை: ரியல் எஸ்டேட்டில் வருமானம் இல்லாததால் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்தவர் கைது !

சென்னை புறநகர் பகுதியில் அடுத்தடுத்து 6 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: ரியல் எஸ்டேட்டில் வருமானம் இல்லாததால் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்தவர் கைது !

ThangaveluBy : Thangavelu

  |  21 Sep 2021 5:06 AM GMT

சென்னை புறநகர் பகுதியில் அடுத்தடுத்து 6 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூர் பிரகாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேஷாத்ரி, இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இதனிடையே கொரோனா பொதுமுடக்கத்தின்போது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பணகஷ்டம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு மதுபோதையில் திருநின்றவூர் பகுதியில் உள்ள 6 ஏடிஎம் மையங்களில் இரும்பு சுத்தியால் தாக்கி கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இந்த சம்பவத்தின்போது ஏடிஎம் இயந்திரத்தின் தொடுதிரை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து சேஷாத்ரி தானே திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையில் திட்டமிட்டு செய்தாரா அல்லது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News