Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை ஐடி நிறுவனத்தில் 40 ஊழியர்களுக்கு கொரோனா.!

சென்னை மகாபலிபுரம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் ஐடி நிறுவனத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

சென்னை ஐடி நிறுவனத்தில் 40 ஊழியர்களுக்கு கொரோனா.!

ThangaveluBy : Thangavelu

  |  23 March 2021 2:11 PM GMT

சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 1,100க்கும் மேற்ட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மகாபலிபுரம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் ஐடி நிறுவனத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.





இதில் 25 முதல் 28 வயதுடைய 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மேலும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 1100க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐடி நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News