Begin typing your search above and press return to search.
சென்னை குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் 120 பேருக்கு கொரோனா உறுதி.!
சென்னயில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குடிநீர் வாரியம் மூலமாக தினமும் 83 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
By : Thangavelu
சென்னயில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குடிநீர் வாரியம் மூலமாக தினமும் 83 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்துவரும் 120 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை ஆவின் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. தற்போது குடிநீர் வாரியத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் அரசு ஊழியர்கள் என பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story