Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை: கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! பேராசிரியர் ஆபிரகாம் மீது வழக்கு!

சென்னை, பள்ளிக்கரணையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்ய கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை: கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! பேராசிரியர் ஆபிரகாம் மீது வழக்கு!

ThangaveluBy : Thangavelu

  |  18 Dec 2021 2:17 PM GMT

சென்னை, பள்ளிக்கரணையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்ய கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணை, ஜலட்டியன்பேட்டை பகுதியில் தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பேராசிரியராக மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் அலெக்ஸ் 41 என்பவர் பணியாற்றி வருகின்றார்.

அந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகள் இரண்டு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் 354, () () ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News