Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் கொடுத்த புகார்: தபால் மூலம் கொலை மிரட்டல்?

தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷித் கொடுத்த புகாரின் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது தேடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் கொடுத்த புகார்: தபால் மூலம் கொலை மிரட்டல்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 May 2022 1:34 AM GMT

தற்போது கொலை மிரட்டல் விடுவது என்பது சமூகத்தின் சாதாரண விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. ஒருவர் செய்யும் காரியங்கள் மற்றவருக்கு எதிராக அமையும் சமயத்தில் அவர்களைக் கொலை மிரட்டல் விடுத்ததன் மூலம் அந்த செயலை தடுக்க முடியும் என்றும், சில சமூக விரோத கும்பல் திட்டமிட்டு தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்திற்கு தபால் மூலம் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.


இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகார் ஒன்றையும் தற்போது தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் அனுப்பியுள்ளது. மேலும் தபால் மூலம் வந்த கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களை கண்டு பிடிப்பதற்காக தனி குழு அமைக்கப்பட உள்ளதாகவும் போலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விஷ்வ இந்து பரிஷத்தின் சென்னை மாநகர அமைப்பாளர் சத்தியமூர்த்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.


குறிப்பாக அந்த புகாரில் கூறியிருப்பதாவது கடந்த 11ஆம் தேதி அன்று தங்கள் அலுவலகத்திற்கு கணித்து முன்ப வந்துள்ளதாகவும் மேலும் அந்த கடிதத்தில் விஎச்பி அமைப்பின் வேதாந்தம் பத்திரிக்கை நிர்வாகி ஆர் எஸ் கோபால் ஜி, ராமேஸ்வரத்தை சேர்ந்த விஎச்பி நிர்வாகி சரவணன் ஆகியோர் தங்கள் செயல்களை நிறுத்த விட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கேரளாவை சேர்ந்த ஏதோ ஒரு அமைப்பின் மூலம் தான் இந்த கடிதம் வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy:Puthiyathalaimurai News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News