Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் சிலையை கரைப்பதில் ஏற்பட்ட கலவரம்: தடையை மீறி செயல்பட்டவர்கள் கைதா?

சென்னையில் விநாயகர் சிலையை கரைப்பதில் தடைகளை மீறி செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

விநாயகர் சிலையை கரைப்பதில் ஏற்பட்ட கலவரம்: தடையை மீறி செயல்பட்டவர்கள் கைதா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Sept 2022 6:17 AM IST

இந்திய முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. மேலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்திக்கான பிரம்மாண்ட சிலைகள் வைக்கப்பட்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடைபெற்று வந்தது. இந்த வண்ணம் சென்னை ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,554 சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்திக்காக வழிபாடுகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றன. நேற்று சென்னையில் விநாயகர் சிலை கரைப்புக்கான நிகழ்ச்சி முழு பாதுகாப்புடன் நடைபெற்றது.


விநாயகர் சிலையை சிலையை கரைப்பதற்கான ஏற்பாடுகள் பணியில் பலமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னை பட்டினம் பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் விநாயகர் சிலையை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சந்திப்பில் தடைகளை மீறி விநாயகர் சிலையை கொண்டு சென்று இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.


தடைகளை மீறி கொண்டு சென்றவர்களை கைது செய்வதில் அங்கு பெரும் தள்ளுமுள்ளு கலவரம் ஏற்பட்டது. குறிப்பாக பல்வேறு மக்கள் ஒன்று திரண்டு விநாயகர் சிலையை கரைப்பதற்கு கூடியிருக்கும் கூட்டத்தில் கைது செய்வது என்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயல் ஆகும். அப்போது போலீஸாருக்கும் சிலையை கொண்டு வந்தவருக்கும் இடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் இந்த பகுதி பெரும் பரப்பரப்பு காணப்பட்டது.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News