Kathir News
Begin typing your search above and press return to search.

தாய்க்கும், மகளுக்கும் எமனாக மாறியதா சிக்கன் கிரேவி ? கோவில்பட்டியில் நடந்த கொடூரம் !

தாய்க்கும், மகளுக்கும் எமனாக மாறியதா சிக்கன் கிரேவி ? கோவில்பட்டியில் நடந்த கொடூரம் !

DhivakarBy : Dhivakar

  |  13 Oct 2021 7:01 AM GMT

தூத்துக்குடியில் கோழி இறைச்சி மற்றும் குளிர்பானம் சாப்பிட்டதால் தாயும், மகளும் இறந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசிப்பவர் இளங்கோவன். இவரது மனைவி கற்பகவல்லி ( 34). இவர்களுக்கு தர்ஷினி (7) என்ற மகளும், பாண்டி (8) என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில் உறவினர் வீட்டின் விசே‌ஷத்திற்கு கற்பகவல்லி தனது 2 குழந்தைகளுடன் சிப்பிப்பாறைக்கு கற்பகவல்லி சென்றுள்ளார். வீடு திரும்பியபோது ஓட்டலில் இருந்து சிக்கன் கிரேவி வாங்கியுள்ளனர் . சிறுவன் பாண்டியை தவிர தாயும்,மகளும் மட்டும் சிக்கன் கிரேவியை சாப்பிட்டனர் . இந்நிலையில் சாப்பிட்ட பின்னர் தாய்-மகளுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது அதனால் அருகிலுள்ள பெட்டிக்கடையில் இருந்து ரூ. 10 -க்கு குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.

திடீரென்று அவர்கள் வாயிலிருந்து நுரை தள்ளியுள்ளது. அதிர்ச்சியடைந்த கற்பகவல்லியின் தாய் உடனடியாக மீட்டு கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து சென்றனர் . சிகிச்சை பலனளிக்காமல் தாய்-மகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.இது குறித்து கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஓட்டலில் இருந்து வாங்கி சாப்பிட்ட கோழி இறைச்சியினால் அவர்கள் உயிரிழந்தனரா? அல்லது பெட்டிக்கடையில் வாங்கி குடித்த குளிர்பானத்தால் உயரிழந்தனரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த கற்பகவல்லி-தர்ஷினி ஆகியோரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதபரிசோதனைக்கு பிறகே இவ்வழக்கில் தெளிவான முடிவு வரும் என்று நம்பப்படுகிறது.

Image : Spice Eats

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News