Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் அதிர்ச்சி ! பெண்ணிடம் நிர்வாணமாக சண்டையிட்ட தலைமைக் காவலர் !

சென்னை, அம்பத்தூரில் தலைமை காவலர் ஒருவர் மதுபோதையில் பெண்கள் முன்னாள் நிர்வாணமாக சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அதிர்ச்சி ! பெண்ணிடம் நிர்வாணமாக சண்டையிட்ட தலைமைக் காவலர் !

ThangaveluBy : Thangavelu

  |  21 Sep 2021 6:17 AM GMT

சென்னை, அம்பத்தூரில் தலைமை காவலர் ஒருவர் மதுபோதையில் பெண்கள் முன்னாள் நிர்வாணமாக சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் கோயம்பேடு போக்குவரத்து துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இதனிடையே கிருஷ்ணகுமாருக்கும் அதே தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவருக்கும் வாகனம் நிறுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் போலீசாருக்கு மதிப்பள்ளித்து மதுபோதையில் இருந்தவரிடம் தவிர்க்கும் விதமாக முருகேசன் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். முருகேசன் வெளியில் சென்றதை அறிந்த கிருஷ்ணகுமார், முருகேசன் மனைவியை ஆபாசமாக திட்டியது மட்டுமின்றி நிர்வாணமாக சண்டையிட்டுள்ளார். இச்சம்பவத்தால் முகம் சுழிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News