Kathir News
Begin typing your search above and press return to search.

11ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய முதலமைச்சர்.!

11ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய முதலமைச்சர்.!

11ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய முதலமைச்சர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Dec 2020 12:29 PM GMT

தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக்கு சென்று படிப்பதற்கு மிகவும் வசதியாக உள்ளது என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 214 கோடியே 79 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 5 லட்சத்து 45 ஆயிரம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 214 கோடியே 79 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 5 லட்சத்து 45 ஆயிரத்து 166 விலையில்லா, மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தை தொடக்கி வைக்கும் அடையாளமாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் மாணவ, மாணவியர் 9 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News