தருமபுரியில் பணத்திற்காக கடத்தப்பட்ட சிறுவன் கோவையில் மீட்பு.!
தருமபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு ஹரிஷ் என்ற 7 வயதுடைய மகன் உள்ளான்.
By : Thangavelu
தருமபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு ஹரிஷ் என்ற 7 வயதுடைய மகன் உள்ளான்.
இந்நிலையில், ராஜசேகரிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக சரவணகுமார் என்ற நபர் நண்பராகியுள்ளார். இதனிடையே பழைய கார் ஒன்று வாங்கி தரும்படி சரவணகுமார் ராஜசேகரிடம் ரூ.80,000 கொடுத்துள்ளார். ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் ராஜசேகர் கார் வாங்கி தராமல் இருந்துள்ளார். இதனிடையே பணம் தராமலும், கார் வாங்கி தராமலும் ராஜசேகர் இழுத்தடித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சரவணகுமார், ராஜசேகரின் மகன் ஹரிஷை கடத்தி சென்றுள்ளார். 24 மணி நேரத்திற்குள் பணம் கொடுத்தால் உங்கள் மகனை விடுவதாக கூறியுள்ளார். இதனால் பயந்து போன ராஜசேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே சாதுரியமாக பேசிய போலீசார் சரவணகுமாரை கோவையில் கைது செய்தனர். அவரிடம் இருந்த சிறுவனையும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுவன் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனை கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.