Kathir News
Begin typing your search above and press return to search.

பிச்சை எடுக்கும் குழந்தைகள்! நடவடிக்கையில் இறங்கிய சென்னை போலீஸ்!

பிச்சை எடுக்கும் குழந்தைகள்! நடவடிக்கையில் இறங்கிய சென்னை போலீஸ்!

பிச்சை எடுக்கும் குழந்தைகள்! நடவடிக்கையில் இறங்கிய சென்னை போலீஸ்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jan 2021 4:14 PM GMT

தமிழகத்தில் பல இடங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து அதில் வரும் வருமானத்தில் சிலர் வாழ்ந்து வருகின்றனர். அது போன்றவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய காவல்துறை இறங்கியுள்ளது. இந்த குற்றச்சம்பவங்களை தடுக்க சென்னை போலீஸ் களத்தில் இறங்கியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் பிரதான சிக்னல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பிச்சை எடுப்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். அவற்றில் பெரும்பாலான குழந்தைகள் வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வந்துள்ளவை ஆகும். அதில் ஒரு சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் பிச்சை எடுத்து வருகின்றனர். குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து நிறைய பணம் சம்பாதிப்பவர்களும் அதிகம். இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து குழந்தைகளை கடத்தும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது போன்றவைகளை தடுக்கும்விதமாக தடுப்பு பிரிவின் கீழ் செயல்படும் குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு ஈடுபட்டு வருகிறது.
இந்த பிரிவு போலீசார் கடந்த ஆண்டில் மட்டும் 135 குழந்தைகளை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இது பற்றி போலீசார் கூறும்போது, குழந்தை கடத்தும் தரகர்களை பிடிக்க சென்னை சென்டர் மற்றும் எழும்பூர் ரயில்வே போலீசாருடம் இணைந்து குழந்தைகளை தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 1263 குழந்தைகளை மீட்டு ஒப்படைத்துள்ளதாக கூறியுள்ளனர். இதில் வெளிமாநில குழந்தைகளும் அடங்கும் என கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News