Kathir News
Begin typing your search above and press return to search.

தருமபுரியில் விரைவில் சிப்காட் திறக்கப்படும்.. தொழில்துறை அமைச்சர் தகவல்.!

தருமபுரியில் விரைவில் சிப்காட் திறக்கப்படும்.. தொழில்துறை அமைச்சர் தகவல்.!

தருமபுரியில் விரைவில் சிப்காட் திறக்கப்படும்.. தொழில்துறை அமைச்சர் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Feb 2021 2:23 PM GMT

தருமபுரி மாவட்டத்தில் மக்களின் மிகவும் நீண்டகால கோரிக்கையான சிப்காட் விரைவில் திறக்கப்படும் என்று பேரவையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

பேரவை கூட்டத்தொடர் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பேரவைக் கூட்டத்தில் பல்வேறு வகையான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அதன்படி தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது: தருமபுரி சிப்காட்டை விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைப்பார். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக தருமபுரியில் சிப்காட் அமைக்கப்படும் என கூறினார்.

இதற்காக சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பிரச்சனைகளால் தாமதமாகியது. தற்போது சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு விரைவில் சிப்காட் அமைக்கப்படும் எனக் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News