Kathir News
Begin typing your search above and press return to search.

உன் புருஷனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றால் உடனே மதம் மாறு - நாகப்பட்டினத்தில் மருமகளுக்கு மாமியார் கொடுத்த டார்ச்சர் !

Christian in-laws force mute Hindu woman to convert, throw her out for refusing

உன் புருஷனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றால் உடனே மதம் மாறு - நாகப்பட்டினத்தில் மருமகளுக்கு மாமியார் கொடுத்த டார்ச்சர் !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 March 2022 2:37 PM GMT

நாகப்பட்டினத்தில் இளம் பெண் ஒருவர், தன்னை மதமாற்றம் செய்ய முயன்ற மாமியாரின் முயற்சியை முறியடித்ததால், கணவர் தன்னுடன் வாழ மறுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் தனது தாயுடன் போராட்டம் நடத்தினார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 26 வயது ஊமைப் பெண் விமலா தேவி, ஜூலை 4, 2019 அன்று சங்கர் என்பவருடன் திருமணம் செய்து கொண்டார். சங்கர் அவருடன் 15 நாட்கள் மட்டுமே வாழ்ந்துவிட்டு சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றார். அவர் வெளியேறிய பிறகு, தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு அவரது மாமியார் வற்புறுத்தியதாக விமலா தேவி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அவள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாள். அதன்பிறகு விமலா தனது தாயுடன் வசித்து வருகிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமலாவின் தாய் தமிழரசி , தன் மகள் தன்னுடன் வாழ்ந்த 3 வருடங்களில் ஒரு முறை கூட சங்கர் தன்னை அழைக்கவில்லை. அவர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோதும், அழைப்புகளை எடுக்கவில்லை. இதுகுறித்து நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

போலீசாரின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த விமலாதேவி, தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார். இது போன்ற சம்பவங்கள் இதுவே முதல்முறை கிடையாது.

ஜனவரி 2022 இல், மதம் மாறிய கிறிஸ்தவ மாமியார், பிறந்த குழந்தையை பார்க்க வேண்டும் என்றால், கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும்படி மருமகனை வற்புறுத்தினார் .

மதம் மாறிய கிறிஸ்தவ குழந்தைகள் இந்து முறைப்படி தனது இறுதிச் சடங்குகளைச் செய்யமாட்டார்கள் என, மனமுடைந்த ஒருவர் தனது ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டை கோயிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார் .

கிழக்கு உ.பி.யின் ஜான்பூரில், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண் , தனது 22 வயது மகளை அவர்களது கிராமத்தில் செயல்படும் மிஷனரி கும்பல் கடத்திச் சென்றதாக புகார் அளித்தார். முழு குடும்பமும் மதம் மாறாவிட்டால் சிறுமியைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினர். இது போன்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News