Kathir News
Begin typing your search above and press return to search.

நெருக்கமான புகைப்படம்.. நெல்லையில் நாடக காதலால் பெண்ணின் வாழ்க்கை நாசம்.!

நெருக்கமான புகைப்படம்.. நெல்லையில் நாடக காதலால் பெண்ணின் வாழ்க்கை நாசம்.!

நெருக்கமான புகைப்படம்.. நெல்லையில் நாடக காதலால் பெண்ணின் வாழ்க்கை நாசம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Nov 2020 10:39 AM GMT

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே இளம் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி அவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களை காட்டி மிரட்டி நகை மற்றும் பணம் பறித்த இரண்டு கொத்தனார்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாடக காதல் எப்படி எல்லாம் நடைபெறும் என்று சமீபத்தில் வெளியான திரௌபதி படம் உணர்த்தியது. ஆனாலும் பெண்கள் திருந்திய பாடில்லை.

நெல்லை மாவட்டம், முக்கூடலைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்துக்கு முந்தைய காதலனால் தனது இல்லற வாழ்க்கை தற்போது நாசம்மாகிவிட்டதாக சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி பிரதீப்பிடம் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

முக்கூடல் அடுத்த கண்டப்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் சாலமன் என்பவருடன் அந்த பெண் திருமணத்துக்கு முன்னதாக பழகி வந்துள்ளார். அந்த பெண்ணிடம் காதல் வலையில் வீழ்த்தி நெருங்கி பழகி வந்துள்ளார் சாலமோன் என்பவர். இருவரும் நெருங்கி பழகி வந்தபோது ஆபாசமான புகைப்படங்களை எடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வீட்டில் வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அப்போது சாலமோன் மவுனமாக இருந்து வந்துள்ளார். ஒரு சில மாதங்கள் கழித்து நெருக்கமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறிக்க தொடங்கியுள்ளான்.

பணம் இல்லாதபோது அந்த பெண்ணிடம் கம்மல், செயின் உள்ளிட்டவற்றை வாங்கி வந்துள்ளான். ஒரு கட்டத்தில் இதுபற்றி அறிந்த சாலமனின் நண்பர்களான ஜான்சன், மனோ சேட் ஆகியோர்களும் வீடியோ மற்றும் புகைப்படங்களைக் காட்டி அந்த பெண்ணை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய நிலையில், மனைவியின் நடத்தை மீது அவரது கணவன் வீட்டில் இருந்து வெளியே அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னரும் விடாமல் சாலமன் நண்பர்கள் அப்பெண்ணை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே சேரன்மாதேவி ஏ.எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளார். அவர் முக்கூடல் காவல்துறையிடம் உரிய விசாரணை நடத்துமாறு கூறியுள்ளார்.

இதன் பின்னர் போலீசார் விசாரணையில், சாலமனின் நாடக காதலில் விழுந்த அந்த பெண், நெருக்கமாக இருந்த வீடியோக்களும், வீடியோகாலில் பேசிய வீடியோப் பதிவுகளும் அவனிடம் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், சாலமன் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். அவனை போலீசார் தேடி வருகின்றனர். அவனது கூட்டாளிகளான ஜான்சன் ஏற்கனவே ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைதாகி ஜெயிலில் இருப்பது தெரியவந்துள்ளது. மற்றொரு கூட்டாளியான மனோசேட்டை தேடி வருகின்றனர்.

இது பற்றி காவல்துறை உயர் அதிகாரி கூறியதாவது: பெண்கள் காதலர்களுடன் திருமணத்திற்கு முன்பு நெருக்கமாக புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுத்து வைப்பது நல்லது இல்லை, எனவே அதுபோன்ற காரியங்களை தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் திருமணத்திற்கு பின்னர் இது போன்ற சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News