Begin typing your search above and press return to search.
கொரோனா குறித்து ஐ.சி.எம்.ஆர்., விஞ்ஞானிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.!
கொரோனா குறித்து ஐ.சி.எம்.ஆர்., விஞ்ஞானிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு அரசு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
மேலும், தலைமைச் செயலகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஐ.சி.எம்.ஆர்., விஞ்ஞானி, சென்னை தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநர், உலக சுகாதார அமைப்பு முதுநிலை மண்டலகுழு தலைவர், இந்திய மருத்துவ கழக தலைவர் மற்றும் அரசு மருத்துவக்குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இவர்களுடன் நடத்திய ஆலோசனையின் பேரில் ஜனவரி மாதத்திற்குள் மேலும் சில ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story