Kathir News
Begin typing your search above and press return to search.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நலம் விசாரித்த துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 19ம் தேதி குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நலம் விசாரித்த துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.!

ThangaveluBy : Thangavelu

  |  22 April 2021 8:07 AM GMT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 19ம் தேதி குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை முடித்துக்கொண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.





இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார்.




அப்போது, அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை அன்று செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இருவரும் சந்தித்துக் கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News