Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துமத நம்பிக்கையே இல்லாத ஸ்டாலின், எப்படி கோவில்களின் பராமரிப்பை சீரமைக்கும் குழுவிற்கு தலைவராக முடியும்?

CM-headed advisory committee to streamline maintenance of HR&CE temples

இந்துமத நம்பிக்கையே இல்லாத ஸ்டாலின், எப்படி கோவில்களின் பராமரிப்பை சீரமைக்கும் குழுவிற்கு தலைவராக முடியும்?

MuruganandhamBy : Muruganandham

  |  7 Jan 2022 2:52 PM GMT

இந்து சமைய அறநிலையத்துறையின் கீழ் உள்ள புகழ்பெற்ற கோவில்களை சீரமைக்கவும், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்து சமைய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர் பாபு குழுவின் துணைத் தலைவராக இருப்பார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஸ்ரீமத் வராஹ மகாதேசிகன், ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி டி மதிவாணன் ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

பேச்சாளரும் தமிழறிஞருமான சுகி சிவம், கருமுத்து டி கண்ணன், எம்பி சத்தியவேல் முருகனார், என் ராமசுப்ரமணியன், தரணிபதி ராஜ்குமார், மல்லிகார்ஜுன் சந்தான கிருஷ்ணன், ஸ்ரீமதி சிவசங்கர், தேச மங்கையர்க்கரசி ஆகியோர் மீதமுள்ள உறுப்பினர்களாக உள்ளனர். இந்த உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். கடந்த காலங்களில் ஸ்டாலின் கோவில் வழிபாட்டை பலமுறை அவமதித்துள்ள நிலையில், அவர் எப்படி கோவில்களை சீரமைக்கும் குழுவின் தலைவராக முடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்விஎழுப்பி உள்ளனர்.

முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை துறையின் கீழ் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களுக்கு சீருடை மற்றும் வேட்டி அங்கவஸ்திரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், ஓதுவார்கள் எனப் பணிபுரியும் சுமார் 7000 பெண்கள் உட்பட மொத்தம் 52,803 பேர் ஆடைகளைப் பெறுவார்கள் . ஆண் பூசாரிகளுக்கு தலா இரண்டு செட் வேட்டி-அங்காவஸ்திரம் மயில் கண்ணும் , பெண்களுக்கு மஞ்சள் பார்டர்களுடன் கூடிய மெரூன் நிற புடவைகளும் வழங்கப்படும்.

36,684 கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களை உள்ளடக்கும் இந்தத் திட்டத்திற்கு ரூ.10 கோடி செலவாகும். 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இது குறித்து அறிவிக்கப்பட்டது. சீருடைக்கான செலவை முக்கிய கோவில்கள் ஏற்கும்.ஊழியர்கள் சீருடை அணியும் போது பக்தர்களும், பொதுமக்களும் எளிதாக அடையாளம் காண முடியும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News