Kathir News
Begin typing your search above and press return to search.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட சற்று கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளதாக முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  11 Nov 2021 2:31 AM GMT

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட சற்று கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளதாக முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

அதன்படி தமிழகத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்தே இயல்பான மழையை விட கூடுதலாக பதிவாகி வருகிறது. இதனிடையே வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், 8 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று (நவம்பர் 11) சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை ஆகிய இடங்களில் அதி கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கடந்த 4 நாட்களாக வெள்ளம் வடியாம உள்ளது. தற்போது இன்று சென்னைக்கு 'ரெட் அலார்ட்' விடுக்கப்பட்டுள்ளதால் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் சென்னை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News