Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் சட்டவிரோதமாக சுற்றிய ஜார்ஜியா நாட்டவர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

கோவையில் சட்டவிரோதமாக சுற்றிய ஜார்ஜியா நாட்டவர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 April 2022 9:09 AM GMT

கோவை போத்தனூர் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித்திரிந்த ஜார்ஜியாவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போத்தனூரில் கடந்த 18ம் தேதி வெளிநாட்டு இளைஞர் சந்தேகத்திக்கிடமான வகையில் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து. அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் ஜார்ஜிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. விசாரணையின் போது அவர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. "ஹர ஹர சங்கர மஹாதேவா" என்று மட்டும் உச்சரித்துள்ளார்.

அவருடைய பின்னணி குறித்து விசாரித்தபோது, ஈஷா மையத்திற்கு வந்த அவர் பின்னர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திலேயே தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பதும் அவரது பெயர் முர்மேன் மும்லேட்ஸ் என்பதும் தெரியவந்தது.

பெயரை வைத்து பாஸ்போர்ட் துறை அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 11ம் தேதியுடன் அவரது விசா காலம் நிறைவடைந்து இருப்பதும், சட்டவிரோதமாக அவர் இங்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது.

அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Input From: https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-district-georgia-youth-arrested-around-coimbatore-sur-733768.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News