Kathir News
Begin typing your search above and press return to search.

காதலர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த இரு காவல்துறையினர் - என்ன நிகழ்ந்தது?

காதலர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த இரு காவல்துறையினர் - என்ன நிகழ்ந்தது?

ThangaveluBy : Thangavelu

  |  29 April 2022 12:45 PM GMT

கோவை மாவட்டம், சூலூரை அருகே உள்ளது நீலம்பூர். அங்கு உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு காந்திபுரம் பகுதியை சேர்ந்த காதல் ஜோடி காரில் இருந்தவாறு பேசி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் மப்டி உடையில் கருமத்தம்பட்டி ஏட்டு ராஜராஜன் மற்றும் ஆயுதப்படை போலீஸ் ஜெகதீஷ் உள்ளிட்ட இரண்டு பேரும் அங்கிருந்த காதல் ஜோடியை மிரட்டினர்.

அது மட்டுமின்றி இளைஞரையும் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன காதல் ஜோடி தங்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். இதன் பின்னர் வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளனர். இதனால் பயந்துபோன காதலர்கள் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பாதிப்படைந்த இளைஞர் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சூலூர் போலீசார் தனிப்படை அமைத்து காதலரிடம் பணம் வசூலித்தவர்கள் பற்றி விசாரணை நடத்தினர். அப்போது ஓட்டலின் அருகாமையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது காதலர்களிடம் பணம் பறித்தது ஏட்டு ராஜராஜன் மற்றும் ஜெகதீஷ் என்பது தெரியவந்தது. இதன் பின்னர் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது தனியாக சிக்கும் காதல் ஜோடிகளை மிரட்டி இப்படி பணம் வசூல் செய்து வந்துள்ளனர். இதனை தொடர்நது இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Source, Image Courtesy: News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News