Kathir News
Begin typing your search above and press return to search.

கோவை - ஷீரடி தனியார் ரயில் சேவையால் தெற்கு ரயில்வேக்கு ரூ.2.50 கோடி வருவாய்!

கோவை - ஷீரடி தனியார் ரயில் சேவையால் தெற்கு ரயில்வேக்கு ரூ.2.50 கோடி வருவாய்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 July 2022 6:03 AM GMT

பாரத் கவுரவ் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. சுற்றுலா பயணிகள் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களையும், பாரம்பரிய, கலாச்சார சிறப்புமிக்க இடங்களையும் சுற்றிப்பார்க்கும் வகையில், பாரத் கவுரவ் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், தனியார் ரயில் சேவை அளிக்க விரும்பும் நிறுவனங்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, சவுத் ஸ்டார் ரயில் என்ற நிறுவனம் பதிவு செய்து, கோயம்புத்தூரிலிருந்து ஷீரடிக்கு பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் முதல் சேவையைத் தொடங்கியது.

இதன்மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.2.50 கோடி வருவாய் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து மதுரையில் இருந்து, டிராவல் டைம்ஸ் இந்தியா நிறுவனம் 2-வது ரயில் சேவையை வழங்க உள்ளது. இதேபோல, 7 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்து, அடுத்தடுத்து ரயில் சேவையை அளிக்க உள்ளன.

Input From: Hindu Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News