Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த பெண் ! குழந்தை உயிரிழப்பு!

கோவை செட்டிவீதியில் வசிக்கும் ஒரு கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்குதானே பிரசவம் பார்த்ததால் பிறந்த ஆண் குழந்தை இறந்துள்ளது. இது பற்றி தாய் புண்ணியவதி என்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில்  தனக்குத் தானே பிரசவம் பார்த்த பெண் !  குழந்தை உயிரிழப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  7 Dec 2021 7:32 AM GMT

கோவை செட்டிவீதியில் வசிக்கும் ஒரு கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்குதானே பிரசவம் பார்த்ததால் பிறந்த ஆண் குழந்தை இறந்துள்ளது. இது பற்றி தாய் புண்ணியவதி என்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகரம், செட்டிவீதி அருகே உள்ள உப்புகார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஒரு நகை பட்டறையில் பணியாற்றி வருகின்றார். இவருடைய மனைவி புண்ணியவதி. இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருக்கின்ற நிலையில் மீண்டும் கர்ப்பமானார். இதனிடையே 4வது குழந்தை என்று வெளியில் எதாவது பேசுவர்களே என்ற மனவருத்தத்தில் புண்ணியவதி, மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். இதில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தொப்புள்கொடி சரியாக அறுபடததாலும், சரியாக பிரசவம் பார்க்காத காரணத்தினால் குழந்தை இறந்துள்ளது. தாய் மயக்கம் நிலையில் இருந்துள்ளார்.

இது பற்றி தகவல் கிடைத்த விஜயகுமார் குழந்தை மற்றும் தாயையும் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்துள்ளனர். இதனால் அங்கு சென்று பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துள்ளதாக கூறினர். இது பற்றி பெரியகடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் தாய் புண்ணியவதி மீது 315 இந்திய தண்டனை சட்டப்படி வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர். அழகான ஆண் குழந்தையின் உயிரை பறிக்க பெற்ற தாயே இருந்துள்ளார் என்ற செய்தி கோவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: News 18 TamilNadu

Image Courtesy:Deccan Chronicle


Next Story
கதிர் தொகுப்பு
Trending News