Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவரை துன்புறுத்திய தலைமை ஆசிரியர் மீது புகார்!

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர் ஒருவரை தலைமை ஆசிரியர் அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவரை துன்புறுத்திய தலைமை ஆசிரியர் மீது புகார்!

ThangaveluBy : Thangavelu

  |  18 Sep 2021 8:57 AM GMT

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர் ஒருவரை தலைமை ஆசிரியர் அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வஞ்சகரை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகன் ஜீவா திருச்சி மேலசிந்தாமணியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதனிடையே நேற்று பள்ளி சென்ற மாணவன் உடல்நலக்குறைவால் ஆசிரியரிடம் அனுமதி வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் பள்ளிக்கு திரும்ப தாமதமானதால் மாணவனை, தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலக உதவியாளரும் சேர்ந்து அடித்து கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து மாணவனை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக மாணவனின் பெற்றோர்கள் பேசும்போது, ஆசிரியர்கள் என்பவர்கள் குருவுக்கு சமமானவர்கள். மாணவன் தவறு செய்தால் பெற்றோர்களிடம் தகவலை சொல்லியிருக்க வேண்டும்.

எனவே இது போன்ற மிருகத்தனமான சித்ரவதை செய்த ஆசிரியருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் எனக் கூறினர். மேலும், சம்பவம் தொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

Source, Image Courtesy: News 7


Next Story
கதிர் தொகுப்பு
Trending News