பள்ளி குழந்தைகளிடம் மதபிரச்சாரம் - கையும் களவுமாக பிடித்த இந்து முன்னணி!

By : Kathir Webdesk
மதமாற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை. தங்களுடைய மதத்தை என்ன செய்தாவது உலகெங்கிலும் பரப்புவதில் சர்ச்சுகள் தீவிரமாக இருந்து வருகின்றன.இந்து மற்றும் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் இந்தியா, திபெத், நேபாளம் போன்ற நாடுகளில் தீவிர மதமாற்ற முயற்சிகளை நிகழ்த்தி வருகின்றன.
ஒரு புறம் மத மாற்றம் , மத மாற்றத்தின் மூலம் தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படுவது, சிறுபான்மையிரை பயன்படுத்தி வாக்கு வங்கி அரசியல் நடத்துவது, சில இடங்களில் பயங்கரவாதத்திற்கு துணை போவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி கிராமத்தில் பள்ளி குழந்தைகளிடம் மதபிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனை கண்டித்து வரஞ்சரம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
