Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை - கொடூர வாலிபருக்கு என்ன தண்டனை?

சென்னையில் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை - கொடூர வாலிபருக்கு என்ன தண்டனை?
X

ThangaveluBy : Thangavelu

  |  22 April 2022 3:45 PM GMT

சென்னையில் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை, புளியந்தோப்பு பகுதியில் ஒரு தம்பதிக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு குழந்தை தனியாக விளையாடி கொண்டிருந்த சமயத்தில் ஆகாஷ் 19, என்ற வாலிபர் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து குழந்தையின் அம்மாவுக்கு தெரிய வந்த பின்னர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பற்றிய வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சாட்சிகளை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் நேற்று (ஏப்ரல் 21) நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆகாஷ்க்கு ரூ.5000 அபராதமும், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிதார். அபராத தொகையை செலுத்த தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என நீதிபதி கூறினார்.

அதற்கு அடுத்து போக்சோ சட்டப்பிரிவில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அனைத்தையும் குற்றவாளி ஏகபோக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டது.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News