Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா பாதிப்பு, 12 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா பாதிப்பு, 12 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா பாதிப்பு, 12 பேர் உயிரிழப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Nov 2020 6:51 PM GMT

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 6 கோடியே 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 14 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வைரஸ் நோய். கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் இதற்கான மருந்து வரலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,435 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளனர்.

இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 77ஆயிரத்து 616ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 11,109 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 60,610 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பரிசோதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 18 லட்சத்து 64 ஆயிரத்து 177 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 883 பேர் ஆண்களும், 559பேர் பெண்களும் அடங்குவர். இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.


5 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11, 681ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,494 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 826ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News