Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா அறிகுறியால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: இரண்டு குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு!

கொரோனா அறிகுறியால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: இரண்டு குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  9 Jan 2022 12:40 PM GMT

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக குடும்பத்துடன் சாணி பவுடரை குடித்து, குழந்தை உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், கல்லுமேடு அருகே உள்ளது எம்.ஜி.ஆர். காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் லட்சுமி தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசிந்து வந்தார்.

இந்நிலையில், லட்சுமியின் மூத்த மகள் ஜோதிகாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது பற்றி கேள்விப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் தொற்று வந்துவிட்டதோ என்ற அச்சம் காரணமாக லட்சுமி, ஜோதிகா, ரித்தீஷ், சிபிராஜ் உள்ளிட்ட 4 பேரும் சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதில் குழந்தைகள் ஜோதிகா மற்றும் ரித்தீஷ் உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று அச்சத்தால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரை மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொற்று ஏற்பட்டாலும் அதில் இருந்து மீண்டு வருவதற்கு தேவையான மருந்துகள் இந்தியாவில் உள்ளது. எனவே கொரோனா தொற்று காரணமாக யாரும் அச்சப்பட தேவையில்லை. அது மட்டுமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு தொற்று எளிதாக தாக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: News 7 Tamil

Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News