Begin typing your search above and press return to search.
கொரோனா தொற்றில் அலட்சியம் கூடாது: சுகாதாரத்துறை செயலாளர்.!
கொரோனா தொற்றில் அலட்சியம் கூடாது: சுகாதாரத்துறை செயலாளர்.!

By :
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் வேகமாக குறைந்து வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் குறைந்து விட்டது என்பதற்காக மக்கள் மெத்தனமாக இருக்காமல் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் மெத்தனமாக இருக்கக்கூடாது என்றார்.
வருகின்ற 7ம் தேதி முதல் அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். மேலும், செய்தியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், நீதித்துறையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
Next Story