Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு 500 மாநகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்!

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு 500 மாநகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்!

ThangaveluBy : Thangavelu

  |  10 May 2022 9:05 AM GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 500க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் உள்ளிட்டவை பங்கேற்றது.

அப்போது அவர் விடுத்துள்ள கோரிக்கையின்படி, தினக்கூலி தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதில் நிரந்தர பணியாளர்களுக்கு 7வது ஊதியக்குழு பணப்பலன்களை வழங்க வேண்டும். தினமும் கூலியாக ரூ.625 வழங்க வேண்டும். கொரோனா சமயத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 15 ஆயிரம் ரூபாயை நிவாரண உதவியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News