Kathir News
Begin typing your search above and press return to search.

கடலூர்: கட்டடம் இடிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு!

கடலூர்: கட்டடம் இடிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  27 Jan 2022 10:58 AM GMT

கடலூர் அருகே உள்ள எஸ்.புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் இல்லாத நிலையில் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது.

இந்நிலையில், இந்த பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 3 பேர் விளையாடியுள்ளனர். அப்போது பழைய கட்டிடம் திடீரென்று இடிந்து மாணவர்கள் மீது விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் 3 மாணவர்களும் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

இதுப்பற்றி தகவல் கிடைத்த ஊர் மக்கள் உடனடியாக இடிபாடுகளை அகற்றி மாணவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வீரசேகர் மற்றும் சுதீஷ்குமார் ஆகிய 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் வனேஷ்வரனுக்கு மட்டும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News