Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் முழு ஊரடங்கு தேவை.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!
சென்னையைச் சேர்ந்த பாலாஜி ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பாலாஜி ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். மேலும், அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story