Kathir News
Begin typing your search above and press return to search.

ராணிப்பேட்டையில் கல்குவாரிகளால் ஆபத்து - லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்

ராணிப்பேட்டையில் கல் குவாரிகளிலிருந்து அதிகளவிலான கற்களையை ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டையில் கல்குவாரிகளால் ஆபத்து - லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  13 Oct 2022 5:09 AM GMT

ராணிப்பேட்டையில் கல் குவாரிகளிலிருந்து அதிகளவிலான கற்களையை ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை செங்காடு மோட்டூர் கிராமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் குவாரிகளிலிருந்து பாறை, கற்கள், ஜல்லிகளை ஏற்றி சென்ற பத்துக்கும் மேற்பட்ட லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.

அதிக பாரத்துடன் நாள்தோறும் ஏராளமான லாரிகள் சென்று வருவதால் சாலைகள் கொண்டும் குழியுமாக மோசமடைவதாகவும். கொண்டு செல்லப்படும் கற்கள் சாலைகளில் விழுவதால் விபத்து நேரிடுவதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

லாரிகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் அதிக பாரம் ஏற்றி வந்த இரண்டு லாரிக்கு அபராதம் விதித்தனர்.


Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News