Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சி: மீண்டும் உயிர்த்தெழுவார்.. இறந்து ஒருவாரமான தாயின் உடலை வைத்து ஜெபம் செய்த மகள்கள்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்தவர் மேரி 75, இவர் அரசு பள்ளி ஆசிரியை£க பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் அந்த பகுதியில் ஊருக்கு வெளியே கட்டப்பட்ட வீட்டில் திருமணமாகாத ஜெசிந்தா 43, ஜெயந்தி 40, என்ற இரண்டு மகளுடன் வசித்து வந்துள்ளார். எப்போதும் 3 பேரும் சேர்ந்து ஜெபம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

திருச்சி: மீண்டும் உயிர்த்தெழுவார்.. இறந்து ஒருவாரமான தாயின் உடலை வைத்து ஜெபம் செய்த மகள்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  9 Oct 2021 11:19 AM GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்தவர் மேரி 75, இவர் அரசு பள்ளி ஆசிரியை£க பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் அந்த பகுதியில் ஊருக்கு வெளியே கட்டப்பட்ட வீட்டில் திருமணமாகாத ஜெசிந்தா 43, ஜெயந்தி 40, என்ற இரண்டு மகளுடன் வசித்து வந்துள்ளார். எப்போதும் 3 பேரும் சேர்ந்து ஜெபம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மேரியின் உறவினர் ஒருவர் அவர்களை பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது உள்ளே சென்று பார்த்த உறவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் வீட்டில் இறந்துபோன மேரியின் உடலை வைத்து இரண்டு மகள்களும் ஜெயம் செய்துள்ளனர். உறவினரை பார்த்ததும் ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி ஆகியோர் அவரை வெளியே அனுப்பி ஜெபத்தை தொடர்ந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் அப்பகுதி மக்களிடம் நடந்த சம்பவம் பற்றி கூறிவிட்டு சென்றுவிட்டார். இது பற்றி அப்பகுதியினர் மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலை தொடர்ந்து நேற்று முன்தினம் அங்கு சென்ற போலீசார் மேரியின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் இரண்டு மகள்ளும் கதவை திறக்காமல் தொடர்ந்து ஜெபம் செய்துள்ளனர். நீண்ட நேரத்திற்கு பின்னர் கதவை திறந்துள்ளனர். போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் மேரியின் உடல் மீது பைளிளை வைத்து ஜெபம் செய்துள்ளனர்.

உடனடியாக மேரியின் உடலை எடுக்க போலீசார் முற்பட்டபோது, இரண்டு மகள்களும் எடுக்க விடாமல் தடுத்துள்ளனர். ஜெபம் செய்தால் எங்கள் அம்மா உயிர்தெழுவார் என்று கூறியுள்ளனர். இதன்பின்னர் பக்குவமாக போலீசார் எடுத்துகூறியதும், மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரிசோதனை செய்து முடித்த டாக்டர்கள், மேரி இறந்த ஒரு வாரம் ஆகியிருக்கும் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர்.

அப்போதும் மருத்துவமனையில் ஜெசிந்தாவும், ஜெயந்தியும் எங்கள் தாய் மேரி இறக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து ஜெபம் செய்து அவரை உயிர்த்தெழுந்து விடுவார் என்று கூறினர். இதனை பார்த்த மருத்துவர்கள் மற்றும் போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தாயின் உடலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வீட்டில் வைத்து ஜெபம் செய்த மகள்களால் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News